Thursday, April 19

சித்தர் பூமி ...விரைவில்..!

2014 முதல் வேந்தர் டிவியில் வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சி மூன்றாவது கண். பல தடைகளையும், பல சிரமங்களையும் எதிர்கொண்டபடிதான் அந்த நிகழ்ச்சி உலக மக்களின் பார்வைக்கு சென்று சேர்ந்தது. இன்று உலகம் முழுக்க மூன்றாவது கண் நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
 மற்றவையெல்லாம் பொழுதுப்போக்கும் நிகழ்ச்சிகளாக இருக்க, மூன்றாவது கண் நிகழ்ச்சி மட்டும் பலரது துன்பங்களை போக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பலருக்கும் வழிகாட்டியிருக்கிறது. அதன் பிரதிபலனாக, மூன்றாவது கண் நிகழ்ச்சியை இனியும் வேந்தர் டிவியில் தொடர்வதில் சிக்கல்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
அதனால், தற்போது, ஒரு புதிய வாய்ப்பாக இணையத்தின் வழியாகவே உலகின் பார்வைக்கு நிகழ்ச்சியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இனி, வெகு விரைவில் ’சித்தர் பூமி’ எனும் புதிய பெயருடன் நமது நிகழ்ச்சி உங்களது பார்வைக்கு வரவிருக்கிறது. சில தொலைக்காட்சிகளிலும் கூட நமது நிகழ்ச்சி குறித்து கேட்டுள்ளனர். எது எப்படி இருப்பினும் உடனடியாக, சித்தர் பூமி வெகு விரைவில் யூடியூப் வழியாக உங்களை வந்து சேரவிருக்கிறது.
சித்தர் பூமி இந்த யூடியூப் லிங்கில் இணைந்திருங்கள்..., நமது சித்தர் பூமி புதிய எபிசோட் வெகு விரைவில் அப்லோட் செய்யப்பட உள்ளது. நன்றி..,