Tuesday, May 13

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 24


முந்தைய பதிவு (பாகம் 23) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,


"....இந்த ஊருக்கு ஏன் சென்னைன்னு பேரு வந்தது தெரியுமா..?

சென்னப்பநாயக்கர்னு ஆண்டாராம்..நோ..நாம வச்சிக்கிட்டோம்..,
சென்னை அப்டின்னு இருக்கும்.. அத பிரிச்சீங்கன்னா, செம்மையான நெய்னு அர்த்தம்..
செம்மையான நெய் எப்ப வரும் தெரியுமா..உடலிலே எந்த குறையும் இல்லாத பசுமாடு கன்றை ஈன்ற பிறகு,  முதல் 7 வாரத்தில் கிடைக்கக்கூடிய பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு பேருதான்  சென்னை..,

அப்படியாப்பட்ட பசுமாடுகள் மிகுந்த ஏரியாதான் இந்த  சென்னையாம்..இது நான் சொல்லல..கல்கி எங்க தன்னை பிறப்பிப்பதாக காட்டிக்கொள்கிறாரோ.. சென்னையின்னு அவரு குறிப்பிடல..அது வேற..ஏய்..நீ என்ன சென்னைன்னு புதுசா கதை உட்றனு நினைக்காவேணா..,

அவரு அப்படி குறிப்பிடுகிறார்மூணுபக்கமும் கடல் சூழ்ந்திருக்கும்..அந்த இடத்திலே..அதற்கும் கீழே ரத்தக்களறியாக ஆகும்..ஸ்ரீலங்கா பிரச்னை..அதிகமான வலம்புரிசங்குகள் விளையும்..பே ஆப் பெங்கால்..,

சங்குன்னதும் ஒரு விஷயத்த சொல்லணும்..நம்ம ஆஸ்ரமத்துக்கு..நல்ல ஒரு சகோதரி..மிகப்பெரிய ஒரு கிப்ட் கொடுத்தாங்க..அது ஒரு வலம்புரி சங்கு…,

அந்த பத்திரிகையில போட்டிருப்பேன்..விஷ்ணு சொல்றதா..ருக்வேதத்துல 8வது பரீட்சத்துல சொல்லுவாரு..என்னை இந்தலோகத்தில் சங்காகவும், அல்லோகத்தில் சக்கரமாகவும் பார்க்கலாம்..,

ஆக்சுவலா, சங்குன்னாலே..வலம்புரியா இருந்தாதான் பிராப்தம்.. வலம்புரின்னா,ரைட்..
இடம்புரின்னா, லெப்ட்..சங்கு பாத்தீங்கன்னா, மோர்ஆர் லெஸ் லெப்ட்டாதான் இருக்கும்..நோ..நோ..நீ வலம்புரிசங்காக என்னை காணும் பட்சத்தில் என்னை பூலோகத்திலேயே பாத்துடலாம்..அப்படி இல்லன்னா, நீ மேல தான் வரணும்..சக்கரமாத்தான் பாக்கணும்..,

சர்ரா நமக்கு கிடைக்குமா..கிடைக்குமான்னா, ஒரு நாள் கிடைச்சிருச்சி..,
இப்ப நம்ம ஆசிரமத்துல அந்த வலம்புரிசங்கு இருக்கு..உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வந்து அந்த வலம்புரிசங்கை பாருங்கள்..,

சரி சாமி..சந்தடி சாக்குல மார்க்கெட்டிங்கெல்லாம் பண்ணாதீங்க..இல்ல..,

கல்கி அவதாரம் பத்தி என்ன சொல்றீங்க..ஒண்ணுமில்ல..,

யார் யாரெல்லாம் கல்கி..

நாம கல்கின்னா, ஒரு குதிரையில கத்தி வச்சிட்டு வருவாரு..நோ..,

அவரு ஆழ்ந்து சொல்றது நீங்க புரிஞ்சிக்கணும்..,

அப்படியே வேறமாதிரி டிரான்ஸ்லேட் பண்ணனும்..,

சாமி..நாம கல்கி அவதாரமா எடுக்கலாமா.. எடுக்கலாமே..எப்ப..?

ஷாம்பு போட்டு குளிச்சிட்டு சலூனுக்கு போனீங்கன்னா, நீங்கதான் கல்கி..,

யாராவது போயிருப்பமா..,

இதுக்கு முன்னாடி ராமரே போயிருக்க மாட்டாரு..,

சரி..என்ன சாமி..உளர்றீங்க..நோ..நோ..பேக்ட்..,

கல்கின்னா, என்ன..,

இப்படி நீங்க இருந்தா கல்கி..,

சவரம் பண்றவருக்கு அந்த இடம்தான் தொழில்..அந்த இடம்தானே தெய்வம்..அது அப்ப கோயில்தானே..அப்ப கோயிலுக்கு ஏன் பல்லு விளக்காம போற..நிறைய பேரு இதுக்குன்னே சட்டை வச்சிருப்பான்..அத துவைக்கவே மாட்டான்..அங்க போயிட்டு அப்படியே..என்னவோ சலூன் கடைக்குப்போனா..வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பதறுவாங்க..அப்படியே தொடாததொடாதன்னு.. வாட்..நோ..அவன் கோயிலுக்கு போயிட்டு வர்றான்யா..அப்ப என்ன பண்ணனும்..போகும்போதே..அவரும் ஒரு மனிதர்தானே..அவன மதிக்கணும்..ஆசையா முடிவெட்டணும்..ஊருபட்ட அழுக்கோட போவான்..
அந்த சட்டையப்பாத்தா பரிதாபமான முறையில அவனுக்கே இருக்கும்..பிச்சை போடற அளவுக்கு  போட்டுட்டு போவான் சட்டைய..சலூனுக்கு போடற சட்டையோட நம்மாளுங்க..கோயிலுக்கு முன்னால உக்காந்தா நிறைய சில்லற தேத்தலாம்..அந்தளவுக்கு போறாங்க..அப்படியெல்லாம் இருக்ககூடாது..,

அது ஒரு கோயில்..அது ஒரு மனிதநேயம்..நீங்க எங்கயும் இறைநேயம் ஒண்ணு இல்ல பாருங்களேன்..மனிதநேயம்..,ஆண்கள்தாங்க அப்படி இருக்காங்க..பெண்கள் பாருங்க..பியூட்டி பார்லர்க்கு போகும்போதே அழகாதான் போறாங்க..வெளியேவரும்போது அசிங்கமா வறாங்க..,பெண்கள் எதாவது தப்பா நினைச்சிக்க போறாங்க..,

சரி..ரைட்..,

சரி சாமி வேற எப்படி நாம கல்கியாக மாறலாம்...?

என்னைக்காவது உங்கள..ரோடுல நீங்க போகும்போது 108டோ...ஒரு ஆம்புலன்சோ..உங்கள கடந்து செல்லும்போது..ஒரு நிமிஷம்…உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ…பகவானே அந்த உயிர் திரும்பி நல்லபடியா வரணும்னு வேண்டிக்கிட்டீங்கன்னா நீங்கதான் கல்கி..,

ஆகையால..நீங்கள் அத்தனைபேருமே..பத்தாவது அவதாரத்தை எதிர்நோக்கி இருக்கவேண்டாம்..,


நீங்கள் அத்தனை பேருமே தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி தான்…!"


                                                    ..............நிறைவுபெற்றது..................நன்றி

0 comments: