Thursday, June 26

அதிசய நிகழ்வின் வீடியோப்பதிவு...! ராம நாமத்தை நேரில் கேட்க வந்த குரங்கார் (அனுமன்)..!


'ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்' (முந்தைய பதிவு)

இதுதான் நம்ம பிரபஞ்சவெளியில் பிளாக்ல இதுவரை எழுதப்பட்ட பதிவுகள்லயே, அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட ஒரு பதிவு..,

காரணம், இந்த படங்கள்ல இருக்குற பக்தி பலரையும் சிலிர்க்கவைத்தது..,

அப்படிப்பட்ட நிலையிலதான், இன்னைக்கு எதிர்பாராம, 
அதே நிகழ்வோட ஆதாரமா, 

அந்த ராமாயண உபன்யாசத்துக்கு குரங்குவந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் கிடைச்சது..,

புகைப்படங்களப்பாத்து நம்பிக்கை வராதவங்க கூட இந்த வீடியோவ பார்த்தா, நிச்சயம் பிரமிச்சுதான் போவாங்க..,


ஒரு சின்ன ரீகேப்

இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கிய நகரம் ரட்லம் (Ratlam). இங்கு ஊரின் மையப்பகுதியில காளிகாமாதா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ ராமாயண சரிதம் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது, யாருமே எதிர்பாராமல் திடீரென, மேடைக்கு வந்த ஒரு வெண்குரங்கு, சிறிதுநேரம் ராமாயண உபன்யாசத்தை மேடையில் அமர்ந்து கேட்டுவிட்டு, அந்த உபன்யாசகரை கட்டித்தழுவி, தலைமீது, கைவைத்து ஆசி கூறிவிட்டு, அங்கிருந்த ஸ்ரீ ராமர் படத்தை வணங்கிவிட்டு சென்றது.., 

பார்த்து ரசியுங்கள்...ராமநாமம் ஜெபியுங்கள்..!


ஜெய்ராம்..ஸ்ரீராம்..ஜெய்..ஜெய்ராம்..!


0 comments: