Wednesday, April 16

வால்முளைத்த 6 வயது சிறுவன்..! அனுமனின் மறுபிறவியா..?

"வால் முளைத்த சிறுவன் '
மேல படத்துல நீங்க பார்க்கிற சிறுவன் அமர்சிங்..,

உத்திரபிரதேச மாநிலத்த சேர்ந்த அமர்சிங்கிற்கு 6 வயசுதான் ஆகுது..,

ஊர்மக்கள் இவர அனுமனோட மறுபிறவியாத்தான் பார்க்குறாங்க..,

நிறையபேர் நேர்ல வந்து ,இவர தரிசனம் செஞ்சுட்டு,

ஆசி வாங்கிட்டுபோறாங்க..,

இவரு பிறந்த சில தினங்கள்ல இருந்தே,

முதுகுத்தண்டுல,கொஞ்ச,கொஞ்சமா,முடிக்கற்றை வளர்ந்திருக்கு,

அது நாளடைவுல வால் போல நீளமா வளந்துட்டே வந்திருக்கு..,

அமர்சிங்கோட குடும்பம், இவர அனுமனோட மறுபிறவியா பார்க்கறதால,

வளர்ற இந்த முடிக்கற்றைகள, இவங்க ஷேவ் பண்ணாம விட்டுட்டாங்க..,

இப்போ, அந்த முடிக்கற்றை ஒரு ஜடை மாதிரி,

ஒரு 12அங்குலம் நீளத்துக்கு வளர்ந்திருச்சு..,

அத இவங்க ஜடைபோட்டும் பராமரிச்சிட்டு வர்றத,

படத்துல நாம பார்க்கமுடியும்..,

அமர்சிங் வசிக்கிற நிஜ்மாபுர் (Nijmapur) கிராமத்துக்கான, அடையாளமே,

இப்போ அனுமனின் மறுபிறவியான அமர்சிங்தான்..நிறையபேர்,

இவரபார்க்க,இந்த கிராமத்துக்கு தினமும் வந்துட்டே இருக்காங்க..,

"...இது கடவுள் கொடுத்த வரம், அதனால, வால் மாதிரி வளர்ந்துட்டு இருக்குற

முடியை நீக்க மாட்டோம்னு.." அமர்சிங்கோட குடும்பத்தினர் சொல்றாங்க..,

ஆனா, இந்த சிறுவனப்பத்தி கேள்விப்பட்ட மருத்துவர்கள்,

இது ஒரு பிறவிக்கோளாறுன்னு குறிப்பிட்டிருக்காங்க..,

ஆனா, அமர்சிங் அனுமனோட மறுபிறவியா...இல்லையான்னு,

 நம்மாள நிச்சமா சொல்லமுடியாது..,

ஆனா, அவர் பிறந்த சின்ன ஒரு கிராமத்தோட எல்லைகள தாண்டி,

இந்தியா முழுவதும், இப்போ மீடியா மூலமா,

ஆச்சரியமான ஒரு செய்தியாக மாறியிருக்குற அமர்சிங்..,

நிச்சயமா, ஒரு அதிசயப்பிறவி..!

0 comments: