Wednesday, April 23

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 11


ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகளின் 

உரை தொடர்கிறது.., 

"....அதென்ன சாமி வாமனம்..?

அதுல பாத்தீங்கன்னா, ஷாட்டா இருப்பாரு.

இங்க பாத்தீங்கன்னா, அந்த இடத்துல மகாபலின்னு ஒருத்தன் இருந்தானாம்.


அதாவது, தர்மம் செய்தலில் கூட கர்வம் வரக்கூடாது.

மஹாபலிக்கிட்ட ஒருத்தன் வந்தானாம்..,

ராஜா எப்படி இருக்கீங்க..நல்லா இருக்கேன்..,

பதிலுக்கு ராஜா,அவர திருப்பிக்கேட்டாறாம்,நீங்க எப்படி இருக்கீங்க..?

"..நான் டெய்லி ஒரு நூறு பேருக்கு சாப்பாடு போட்டுட்டுதான் நான் சாப்பிடுவேன்..",

உடனே, ராஜா,"அட என்னடா இது…,

நான் சாப்பாடு போட யாரும், ஆளே இங்க வரமாட்டேங்கிறான்,

ஏன்னா, எல்லாம் சுபிட்சமா இருக்கான்..,

அவ்ளோ அள்ளி வழங்கியிருக்கேன்...அப்படின்னாராம்..,

ஏன்னா, டெய்லி நாம சொல்லுவோம்..,

சாமி..நான் டெய்லி ஒரு நூத்தியோரு வாட்டி ராமஜெயம் சொல்றேன்..,

ஒன்னும் நடக்க மாட்டேங்குது..,

ஒரு ஒருலட்சத்து 32ஆயிரம் வாட்டி, சரவணபவ எழுதியிருக்கேன்,

ஒண்ணும் நடக்க மாட்டேங்குது..,

இத எல்லாத்தயுமே, கவுண்டபிளா வச்சிருப்பான்..,

அதெப்படி கரெக்ட்டா, ஒருலட்சத்து 32 ஆயிரம் வாட்டி சொன்ன நீ..,

எப்படி சொன்னே..,அப்படின்னா.. ,

சாமி, ஒரு வாட்டி ஸ்டாப்கிளாக்ல அழுத்திட்டா

ஒரு செகண்டல  32 வாட்டி சொல்லலாம்…,

அத அப்படியே கவுண்ட் பண்ணிக்குங்க..,

நம்மாளு சொல்லுவான்..11 வாட்டி எழுதனும்..நோ..நோ..,

நாம கவுண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டோம்..,

கால்குலேட் பண்ண ஆரம்பிச்சிட்டோம்னாவே..,

கொஞ்ச, கொஞ்சமா..எட்ட போயிட்ட இருக்கோம்னு அர்த்தம்.

ஏன்னா, இந்த வாமன அவதாரத்துலயும் வர்றது கவுண்ட்தான்..த்ரி..எது..த்ரி..,

இந்த மஹாபலி என்ன பண்றான்…,

கர்வத்தின் உச்சிஇந்த வாமன அவதாரத்த பாத்தீங்கன்னா

இனிஷியலா..மந்திர, தந்திரங்களின் மூலமாகவும்

யாகங்கள் செய்வதன் மூலமாகவும்

யோகங்கள் செய்வதன் மூலமாகவும்

தர்மசக்கரம்னு ஒன்ன விலக்கி வச்சிட்டு

இதத்தவிர மத்த எல்லாம் செய்யறதன் மூலமா

பலனடைந்து விடலாம் அப்படின்னு நினைப்பு..,

என்ன காரணம்..?

மஹாபலியோட அட்வைசர் யாருன்னா..சுக்ராச்சாரியார்..அசுரகுரு..,

பெரிய வேள்வி ஒண்ணு நடக்குது…,

அந்த வேள்வி முடிஞ்சதுன்னா எல்லாத்தையும் கைப்பத்திடலாம்.

அந்த வேள்வியோட சாராம்சம் என்னன்னா

யாரு எத கேட்டாலும் கொடுத்துடனும்..

யாரு எத கேட்டாலும், கொடுக்கக்கூடிய வலிமையும்,பலத்தையும் 

மஹாபலி பெற்றிருப்பதாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறான்.

எப்படி..?

இந்த மஹாபலி என்ன பண்றான்..,

இந்த வேள்வி ஷக்ஷஹார ஹரேம்னு பேரு..கடுமையா இருக்கும் அந்த வேள்வி..

யாரு எதை கேட்டாலும் அந்த ஸ்பாட்லயே கொடுக்கறது..,

டேபிள் சாங்ஷன்..,

என்ன..?

அவளோ வலிமையை தான் பெற்றிருப்பதாக

தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருக்கிறான்..,

ஏய் .யாரு என்னவேனாலும் கேளு..

எல்லாம் கேட்டு முடிச்சிட்டான்..,

யாரும் இல்லையாப்பா..ஒகேவா..முடிச்சாகணும்..

ஓ.. நோஒரே ஒருத்தன் மட்டும் வரான் சின்னதா..,

.................நாளை தொடரும்,

0 comments: