Wednesday, April 16

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 04




ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் உரை தொடர்கிறது...,


"....ரெண்டாவது கூர்ம அவதாரம் ..,

கூர்மம்ன்னா என்ன ஆமை..,

அந்த ஆமை அவதாரம் எடுக்கறதுக்கு, 

மஹாவிஷ்ணுவுக்கு  என்ன காரணம் ஏற்பட்டது..?

வேற எதாவது எடுக்கலாமில்ல..,

நிறைய இருக்கே…,

எக்கச்சக்கமா இருக்கே..,

அந்த ஆமையா ஏன் அவரு எடுக்கணும்..?

நீரிலே வாழ்ற உயிரினங்கள்ல அதிக காலம் உயிர் வாழுறது ஆமை..,

நிலத்துல யானை..,

அது ஏன் நீர்ல இருக்குற உயிரினங்கள்ல ஆமை மட்டும் அதிக நாள் உயிர் வாழுது..ரெஸ்பிரேஷன் கண்ட்ரோல்..,

ஆமைய பாத்தீங்கன்னா, சீரா மூச்சுவிட்டு சீரா மூச்ச இழுக்கும்..,

நிதானமா இருக்கும்..நிதானம்..ஸ்டெடி..,

ஸ்டெடின்னா நாம வேற மாதிரி நினச்சிடக்கூடாது.

இல்ல சாமி..நான் எப்பவுமே ஸ்டெடியாத்தான் இருப்பேன்..அப்படி எல்லாம் இல்ல..

ஆமை என்னா பண்ணும்..ஸ்டெடி..ரெஸ்பிரேஷன் கன்ட்ரோல்..,

மெடிடேஷன் கிளாஸ்கெல்லாம் போனீங்கன்னா

பிராணயாம பயிற்சின்னு ஆரம்பிப்பாங்க..

நாம பிராணயாம பயிற்சின்னு ஆரம்பிச்சாலே..நாம லாயக்கே இல்லன்னு அர்த்தம்.

நிறைய தியான கிளாஸ் போறவங்க தப்பா நினைச்சிக்கக்கூடாது…,

இது என்னோட ஓபன் கமெண்ட்.


நாங்களும் 'மோட்சக்ரியா'-ன்னு ஒரு பேக்கேஜ் கொடுக்கிறோம்..,


பிராணயாமப் பயிற்சின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா

நம்மள நாமளே அசிங்கப்படுத்தறோம்

எங்கிட்ட கேப்பாங்க..சாமி..தியானம்னா கஷ்டமா..?

லோகத்திலயே..தியானம் பண்றதுதான் ரொம்ப ஈசி..,

என்னன்னா..இப்பவும் நீங்க தியானம் பண்ணிட்டுதான் இருக்கீங்க..,

எப்போதெல்லாம் மூச்ச உள்வாங்கி, வெளியே விடறீங்களோ..,

அதுக்கு பேறே தியானம்தான்..!

 இந்த பிராணயாமம்ன்னாலே..சுவாசித்தல்னு அர்த்தம்..!

இப்படி மொழிபெயர்த்து பாருங்க...பிராணயாம்பயிற்சின்னா

என்னமோ பெரிய விஷயமா இருக்கும்..

சுவாசித்தல் பயிற்சின்னா அசிங்கமா இருக்கா..?

பிராணாயாமப்பயிற்சி 7 டேஸ்...,

சுவாசித்தல் பயிற்சி..,

நாம மூச்சு விடுறதுக்கு ஒருத்தர் சொல்லித்தர்றாங்கன்னா..,

நாம மாட்டிக்கிட்டோம்னு அர்த்தம்.

இப்படியே போச்சின்னா..,

இன்னும் ஒரு ரெண்டு, மூணு வருஷத்துல குளிப்பது எப்படின்னு 

கற்றுத்தரப்படும்னு ஒரு போர்டு தொங்கும்...,

பல்லு விளக்குவது எப்படி..நிறைய வரும் இந்த மாதிரி எல்லாம்..?

சரி சாமி..பிராணயாமப்பயிற்சின்னா என்ன..?

அத ஒரு பயிற்சியாக மேற்கொள்ளாமல்..,

ஜஸ்ட் குளோஸ் யுவர் ஐஸ்..அண்ட் வாட்ச் யுவர் ரெஸ்பிரேஷன்…,

ஆமை அப்படிதான் பண்ணுமாம்..,

ஆமைய நீங்க பாத்தீங்கண்ணா…,

மூவ் பண்ணும்போது மட்டும்தான் கண்ணை திறந்திருக்கும்..

ஜூவாலஜி ஸ்டூடன்ட்ஸ் யாராவது இருந்தீங்கன்னா..,

அவங்களுக்கு நல்லா தெரியும்..

மூவ் பண்ணுச்சுன்னாதான் கண்ண திறந்திருக்கும்..,

மூவ் பண்ணலேன்னா, கண்ண மூடி ரெஸ்பிரேஷன வாட்ச் பண்ணிட்டு இருக்கும்.

எப்படிநீந்தும்போதோ, , நடக்கும்போதோ ஊரும்போதோ

மட்டும்தான், கண்ண திறந்திருக்கும்

மத்தபடி கண்ணமூடி ரெஸ்பிரேஷன கவனிச்சிகிட்டே இருக்கும்.

என்ன காரணம்னா, எந்த அவயங்களையும் நம்மால மூடமுடியாது..

 பிரதம்….ஆத்தனாயா..(சம்ஸ்கிருத மந்திரம்) இது ஒரு நீண்ட மந்திரம்..,

அத நாம ரொம்ப நாள் சொல்லிட்டு இருக்க முடியாது.

ரெண்டு, மூணு நாள் ஆயிடும்.

அது கூர்ம அவதாரத்துல பெருமாள் சொல்லுவாரு..,

என்ன அர்த்தம்னா.,உன்னால, எந்த ஒரு அவயத்தையும் மூடவே முடியாது

கண்ண மட்டும்தான் உன்னால மூட முடியும்.

எப்படி..?

வேற எதயும் நம்மால மூட முடியுமா..நம்ம கண்ட்ரோல்ல இருக்கா..இல்லயில்ல.

கண்ண மட்டும்தான் நம்மளால மூடமுடியும்..

என்னன்னா, இது பாத்துச்சுன்னா, எல்லா வேலையுமே பண்ணிடும்.

உனக்கு கொடுக்கப்பட்டது..ஜஸ்ட் குளோஸ் யுவர் ஐஸ்

இப்பதான்..நடராஜர் இங்க உள்ளே வர்றார்.

என்ன சாமி..தசாவதாரம்னு போட்டிருக்கீங்க..

பெருமாள் சம்பந்தமா போட்டிருக்கீங்க..,


நடராஜர கொண்டு வந்து மேடையில வைக்கறீங்களே என்ன காரணம்..?

இது என்ன ஒரு ஆர்ட் பொருளா..?

இல்ல கிப்ட் கொடுக்கணும்னு கொடுக்கிறாங்களா..?

அப்படி எல்லாம் கிடையாது..,

கூர்ம அவதாரம் வரும்போதே நடராஜர் வந்திடுவார்.

என்னன்னா, பிரதோஷம்..பிரதோஷம் 

அப்படின்னு நாம ஒன்னு அட்டென்ட் பண்ணுவோம்.

ஏன் அட்டென்ட் பண்றோம்னா..எல்லாரும் அட்டென்ட் பண்றாங்க..

ஏன் சார்..பிரதோஷத்துக்கு போறீங்க..சுத்தறவங்கள கேளுங்க..,

ஜோசியக்காரன் ஒரு 7 பிரதோஷம் அட்டென்ட் பண்ணச் சொன்னாரு..

அப்ப 8 வது பிரதோஷம்..சார்..அவ்ளோதான்..,

அப்ப என்ன அர்த்தம்..சாமிக்காக வேண்டியோ..,

நமக்காக வேண்டியோ..பிரதோஷத்துக்கு நாம போகல…,

ஜோசியக்காரரு சொல்லிட்டாரு..

இன்னும் ஒரு சிறப்பான விஷயம் தெரியுமா உங்களுக்கு..?

நீங்க என்ன பண்ணனும்னா, உங்களுக்கு என்டர்டெய்ன்மென்ட்டா இருக்கணும்னா

எதாவது ஒரு கோயிலுக்கு போயிடணும்ஜஸ்ட் வாட்ச்..!

அதுவும் பர்டிகுலரா, நவக்கிரகம் சுத்துற இடத்துல போய் நில்லுங்களேன்..,

நீங்க..வாய் விட்டு சிரிச்சிடுவீங்க..,

சுத்தற ஒவ்வொருத்தான பாருங்களேன்..

கைய அப்படியே மடக்கிட்டே சுத்துவான்

சனீஸ்வரன பாக்கும்போது மட்டும் திரும்பிக்குவான்

விரலை மடக்கி எண்ணிக்கிட்டே சுத்தரதஎன்னன்னா, சொல்லியிருப்பாரு 

அவரு(ஜோசியரு)..ஒம்போது சுத்து சுத்து..மேல ஒண்ணு சுத்திடாத..

கரெக்டா ஒம்போது..இல்லன்னா, பதினொன்னு ஒகே…,

நிறையபேரு குழம்பிடுவாம்..,ஒம்போது சுத்தினமா, பத்து சுத்தினமா..?

அதனால சிலபேரு என்ன பண்ணுவான்னா

கல்லு எடுத்துட்டு போயிடறது..சின்னசின்னதா..,

ஒரு ரவுண்ட் முடிஞ்சதும், ஒரு கல்லு எடுத்து, வேற பாக்கெட்ல போட்டுக்கறது..

கோயில்ல ஒரு ரெண்டரை வருஷம் குருக்களா இருந்தேன்..,

அப்பதான் இதெல்லாம் வாட்ச் பண்ணுவேன்..பொறுமையா

இதைவிட சில கூத்தெல்லாம் நடக்கும்..,

இப்பல்லாம் பாத்தீங்கன்னா, நாயன்மார்கள் வழிபாடு

ஆழ்வார்கள் வழிபாடெல்லாம் சுத்தமாவே இல்லாம போயிடுச்சு..

ஒரு முறை நான் கோயிலுக்கு ரொம்ப லேட்டா போனேன்..,

ஒருத்தரு என்ன பண்ணாரு..,

அப்படியே..நாயன்மாருக்கெல்லாம்..விளக்கு போட்டிருந்தாரு….,

எனக்கு, தூக்கி வாரிப்போட்டுச்சு..,

அப்பா, என்ன மாதிரியான மகான்ரா..பொறந்திருக்கான்..,

அதாவது, கடவுளே இல்லன்னுகூட மறுத்துக்கூறும் வாய்ப்புகள் 

நிறையகூட இருக்கு..சிலபேர் சொல்றாங்க..,

ஆனா, நாயன்மார்கள் வாழ்ந்திருக்கான்..,

அதேமாதிரி,பெருமாள்கூட இல்லன்னு சொல்லி வாதிட்டிருக்கலாம்..,

ஆனா, ஆழ்வார்கள் வாழ்ந்திருக்கான்..சரித்திரம் இருக்கு..செப்பேடு இருக்கு..

நான்..ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சேன்..,

அப்படியே கண்கலங்குச்சு எனக்கு..,

சே..நாம காட்டுகத்தா கத்தனதுக்கு,

ஒருத்தனாவது விளக்கு போடறாம் பார்றா.. நாயன்மாருக்குன்னு, கிட்ட போனேன்.

உண்மையிலேயே உங்கள பாக்கறதுக்கு  எனக்கு சந்தோஷமா இருக்குங்க..

ஏன் சாமி இதுக்குபோயி சந்தோஷபடுறீங்க..?

இல்ல..நாயன்மாருக்கு விளக்கு போடறீங்க..

அப்ப இதெல்லாம்..சனீஸ்வரன் இல்லயா..அப்படின்னாரு..

அவரு என்ன பண்ணியிருக்காரு..

போய் கஷ்டம்னு சொல்லிட்டு ஜோசியர பாக்கும்போது,

அவரு என்ன சொல்லியிருக்காருன்னா..,

சனீஸ்வரனுக்கு வெளக்கு போடச்சொல்லியிருக்காரு...,

சனீஸ்வரன்..எப்படி இருக்கும்னு வந்தவருக்கு சரியா தெரியாது..

சிலர்கிட்ட விசாரிச்சுட்டு வந்திருக்காரு..சனீஸ்வரன்னா, அப்படி

கும்பிட்டமாதிரி இருக்கும்னு சொல்லி அனுப்பியிருக்காங்க..

இவரு, கோயில்ல வந்து பார்த்தா, நிறையபேரு, 

கும்பிட்டமாதிரி நின்னுட்டு இருக்காங்க..

ஓ..நிறைய சனீஸ்வரன்கள் இருக்காங்க போலன்னு, 

நினைச்சுகிட்டு, அவருபாட்டுக்கு, வரிசை நின்னுட்டு இருக்குற 

63 நாயன்மார்களுக்கும் வரிசையா விளக்கு போட ஆரம்பிச்சிட்டாரு.

அதுவும் நம்மாளு சனீஸ்வரன கும்படுறதே கொஞ்சம் வித்யாசமா கும்பிடுவான்

ஏன்னா, நாம சொல்லியிருப்போம்..

நேருக்கு நேர் நின்னு பாக்காதே..புடிச்சிக்குவாரு..

எல்லா கிரகத்தையும் நேர்ல பாத்துருலாம்..

ஆனா, சனீஸ்வரன மட்டும் நேர்ல பாக்காதே..

அப்படி, எங்கயுமே, சாஸ்திரத்துல கிடையவே கிடையாது..

ஏன்னா, இருக்குற பிளானட்லயே,

தங்கமான பிளானட் யாருன்னா..சனீஸ்வரன்தான்..

என்ன காரணம்னா, பொதுவான, ஒரு வழக்குச்சொல் உண்டு..

எமதர்மனுடைய சகோதரன்தான் சனீஸ்வரன்

உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..ஆனா

பரிச்சயமில்லாம் இருக்குற ஒரு விஷயத்த சொல்றேனே இப்போ..

என்னது..எமதர்மனும்..சனீஸ்வரனும் அண்ணன், தம்பிகள்..

சனீஸ்வரன கும்பிட்டா, எமன் கிட்ட வரமாட்டான்..

அதனாலதான் சனீஸ்வரனுக்கு ஆயுள் காரகன்னு பேரு..

ஆனால், எல்லோருக்கும் தெரிந்த ஆனா, பரிச்சயமில்லாத 

சூப்பரான ஒரு மேட்டர் இருக்கு..


கர்ணனும்..சனீஸ்வரனுடைய பிரதர்தான்..!...,

..............................நாளை தொடரும்

0 comments: