Friday, August 16

உடலிலிருந்து..பிரபஞ்சவெளிக்கு பயணித்த பரமஹம்சர்..!

சூழ்ந்திருக்கும் பக்தர்கள் கூட்டம்...தன்னை மறந்த நிலையில் பாவ சமாதியில் தன்னைமறந்த ஆனந்த நிலையில் பரவசமாக இருக்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்..!

Sri Ramakrishna Paramahamsar


....1886ம் வருடம்

.....................ஆகஸ்ட் 16 இதே நாள்,

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது உடலிலிருந்து விலகி, பிரபஞ்சவெளியில் கலந்தார்..,

அதற்கு முன்புவரை,

ராமகிருஷ்ணர் இன்னைக்கு எந்த ஊர்ல இருக்காரு..

எத்தனை மணிக்குப் போனா அவரை தரிசிக்கமுடியும் 

இப்படி பல கேள்விகள்..விசாரணைகள்..,

ஆன்ம விசாரணை செய்யவேண்டியவன் ஆளைப்பத்தின விசாரணையில் இருக்கானேன்னு ஒவ்வொரு மகானும், இந்த மானுடகுலம் குறித்த அக்கறையோட ஒவ்வொரு கணமும் யோசிச்சிகிட்டேதான் இருக்காங்க.

.....................ஆகஸ்ட் 16 க்குப்பிறகு,

இனி  ராமகிருஷ்ணரைப்பற்றின  உலகார்ந்த..அவரது இருப்பு சார்ந்த கேள்விகளுக்கு இடமில்லை...,

ஆம்..இனி அவர் எங்கும் நிறைந்தவர்..உங்களுக்கு அவரோட பேசவேண்டுமா..

இருந்த இடத்தில இருந்தபடியே கூப்பிடுங்க....அவரோட நீங்க பேச முடியும்...,

அவரை பார்க்கணுமா..கண்மூடி தியானியுங்கள்..அவரே உங்களை நேரில் வந்து தட்டி எழுப்புவார்..,

அவர் கூப்பிட்டு காளியே நேரில் வரும்போது..நாம் கூப்பிட்டு அவர் வரமாட்டாரா என்ன..?

ஒரு மகானின் வருகையும், இந்த பிரபஞ்சவெளியுடன் கலத்தலும் மிகமுக்கியமான தருணங்கள்...

காலமும், வெளியும் ஞானிகளுக்கு கிடையாதுன்னு சொல்லுவாங்க..

அதனாலதான்,127 வருஷங்களுக்கு முன்னால நிகழ்ந்த அப்படி ஒரு முக்கியமான தருணத்துல..

இதோ இங்க நின்னுட்டு இருக்கிறவங்களோட..இத படிச்சிட்டு இருக்கற  நாமும் இப்ப அந்த நேரத்துல,அந்த இடத்துலதான் இருக்கோம்..,

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன்னோட உடலவிட்டு பிரிந்தபிறகும்கூட,அவரோட அறைக்கு அன்னை சாரதாதேவி வழக்கம்போல சாப்பாடு எடுத்துட்டுப்போறது..அந்த அறைக்குள்ள அவரோட பேசிட்டு இருக்கிறதுன்னு வழக்கமான பாவனையிலயே இருந்திருக்காங்க..

அப்பதான் சிலர் அன்னைகிட்ட கேட்டிருக்காங்க,

"...என்ன நீங்க..அவரு போனபிறகும் தனியா இப்படி எல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க.."-ன்னு,

அதுக்கு அன்னை சாரதா தேவி சொன்ன பதில்தான் ரொம்ப முக்கியமானது, 

"..நான் இன்னமும் அவரோடதான் இருக்கேன்..ஆனா,  அவரு உங்களோட பார்வைக்குத் தெரியாம இருக்கலாம்.."னு சொல்லியிருக்காங்க.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரே உடலோடு இருக்கும்போது, அன்னை சாரதா தேவிகிட்ட இப்படி சொல்லியிருக்கிறாராம்,

"...இந்த உடலைவிட்டு பிரிவது என்பது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு போவது போலத்தான், என்னைப் பார்க்க விரும்புபவர்கள் எப்போதும்போல என்னை அடுத்த அறையில் பார்க்கலாம்..."

இது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாக்கு..!

அதனால, முக்கியமான இந்த நாளில் 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை தியானிப்போம்..!

சூட்சுமவெளியில் அவரை தரிசிப்போம்..

இந்த நாளில் அவரது ஆசி பெறுவோம்..வாருங்கள்..!

குருவேசரணம்..!

0 comments: