Monday, August 12

திருமாலின் அடுத்த அவதாரம்…சென்னையில்..?


தசாவதாரம்

இதுதான் இன்னைக்கு பேசப்போற தலைப்பு

“….கடவுளின் கரம்பிடித்து, ஞானமெனும் கடற்கரையில் சிறிதுநேரம் உலாவப்போகிறோம்..”



இப்படித்தாங்க பேச ஆரம்பிச்சாரு..ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்..,

சென்னை சாலிகிராமத்துல நேத்து(11ம்தேதி ஞாயிறு)  இவரோட ஆசிரமக் கிளை செயல்பட தொடங்கியது. அன்னைக்கு சாயந்திரம் 6மணிக்கு இப்படி ஒரு சத்சங்கத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.

அவரோட பேச்சுல இருந்து அங்கங்க கொஞ்சம் மட்டும், நீங்க சுவைக்கறதுக்காக இங்க கொஞ்சம் தர்றேன்…

(அவரோட பேச்சு ரொம்ப ஆழமானதாக இருந்ததால, அத அப்படியே தரமுடியல..அதனால..அந்த வீடியோவ வெகுசீக்கிரம் இந்த தளத்துல உங்களோட பகிருவேன்..இது ஒரு முன்னோட்டம் மட்டும்தான்..இதுல எதாவது குற்றம்,குறை இருந்தால்..அது என்னால் நிகழ்ந்தவை மட்டுமே..)

“….பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்னு சொல்வாங்க, அது பத்து அல்ல..பற்று..மனிதனுக்கு பத்துவிதமான பற்றுகள் இருக்கிறது. பசி வந்தால் அவை அற்றுப்போகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்…” 

(சமஸ்கிருதுத்துல அந்த 10 பற்றுகளையும் பட்டியலிட்டார்)

அதை உணர்த்துவதுபோல பரிணாம வளர்ச்சியோடு பெருமாள் எடுத்ததுதான் பத்து அவதாரம்…தசாவதாரம்..!

முதல் அவதாரம்…மச்ச அவதாரம்.

ஒருசெல் உயிரிதான் முதல்ல தோன்றின உயிரினம்.அது கடல்லதான் உருவானது.அதுக்கு பயலாஜிக்கலா புரோட்டோசோவான்னு சொல்லுவாங்க.
மீன்..இதுக்கு நீந்த யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை…இந்த அவதாரம் உணர்த்துவது..நீந்துதல்…சர்வைவல்..ஒவ்வொரு மனுஷனும் வாழ்வதற்கு தேவையான விஷயங்கள் அவனுக்குள்ளேயே இருக்குன்னு உணர்த்தறதுதான் இந்த அவதாரம்.

இரண்டாவது..கூர்ம அவதாரம்..ஆமை

சீரான மூச்சு..நிதானம்..இதெல்லாம் தான் ஆமையோட தனித்தன்மை. மூச்சு கட்டுப்பாட்டுக்கு ஆமை மிகச்சிறந்த உதாரணம்.

மூவ் பண்ணுகிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கண்களை மூடியபடியே இருப்பது ஆமையின் வழக்கம்.

ஆழ்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம்…நமது உறுப்புகளில் கண்ணை மட்டும்தான் நம்மால் மூட முடியும்..

இந்த அவதாரம் நமக்கு உணர்த்துவது கண்களை மூடி இருக்கச்சொல்வது.
உள்ளே போய் வெளியே வரும் மூச்சை கவனிக்கச்சொல்வது இந்த அவதாரம்.

(இனி..அடுத்தடுத்த அவதாரம் ஜம்ப் பண்ணி போயிடுவோம்…ரொம்ப விளக்கம் இங்க வேணாம்)

மூனாவது அவதாரம்…வராக அவதாரம்…



இதுல ஆழ்ந்து கவனிச்சீங்கன்னா ஒரு விஷயம் புரியும்…அந்த பன்றி ரூபம் தன்னோட மூக்கு நுனியில உலக உருண்டைய தாங்கி பிடிச்சிருக்கற மாதிரி இருக்கும்..

இதோட அடிப்படை என்னன்னா..மூக்கு நுனியை கவனிப்பதன் மூலம் மூச்சை எளிதா கவனிக்கலாம்…எல்லா தியானத்துலயும் சொல்லித்தரும் விஷயம்தான்.

மூச்சை கவனிக்கிறது மூலமா..ஞானமடையலாம்ங்கறதுதான் இந்த அவதாரம் சொல்வது.

அடுத்தது நரசிம்ம அவதாரம்..குழந்தை உள்ளத்தோடு இருந்தால் கூப்பிட்ட உடனே வருவார் என்பதுதான்..

அடுத்தது வாமன அவதாரம்..நீ என் திருவடி தத்துவத்தை புரிந்துகொண்டால் நீ நானாகிறாய் என்பதுதான்

அடுத்த அவதாரம் பரசுராமர்..உடல் வலிமை உலகத்தை ஆளுதலை உணர்த்துவது.

அடுத்தது ராமர்..வாழ்வின் லட்சியம் ..ஞானமடைதல்

கிருஷ்ணர்…நான் இறை அனுபூதி..என்னை நீ அனுமதி

பலராமர்..விவசாயத்தை விட்டுவிடாதே என்பதை உணர்த்துவது.

இனி வரும்காலத்தில் கட்டியிருக்கும் வீடுகளை இடித்துவிட்டு விவசாயம் செய்யும் நிலை வரப்போகிறது.

பத்தாவது அவதாரம்..தசாவதாரம்..இனிதான் வரப்போவதாக சொல்லியிருக்கும் அந்த அவதாரம்..கல்கி

அது எந்த ஊரில் நடக்கும் எனச்சொல்லியிருக்கும் குறிப்புகளிலிருந்து யூகிக்கலாம்..

செம்மையான நெய் தரும் பசுமாடுகள் நிறைந்த ஊர்…மூணுபக்கமும் கடல் சூழ்ந்த ஊர்…அந்த ஊருக்கு கீழே ரத்தகளறி நடக்கும்.. அந்த ஊரில் வலம்புரி சங்கு விளையும்…இப்படி சொல்லப்பட்டிருக்கு.

இப்போ …சென்னை என்ற பெயரோட விளக்கத்த வேற என்னன்னவோ சொல்றாங்க..அது அப்படியில்ல..சென்னை என்பது செம்மையான நெய் தரும் பசுமாடுகள் நிறைந்த ஊர் என்பதைத்தான் சென்னை என குறிப்பிடப்பட்டிருக்கு.

அடுத்ததா…மூணுபக்கமும் கடல்..சென்னையில இருக்கு…

அடுத்து..ரத்தகளறி..இலங்கையில நடந்தது

இங்கு வலம்புரி சங்கு விளையும்…சென்னையில BAY OF BENGAL கடல் பகுதியிலதான் ஏராளமான வலம்புரி சங்குகள் விளைகின்றது.
…அப்படியானால்…கல்கி அவதாரம் …சென்னையிலதான்…

(இப்படியாக ஒரு இரண்டரை மணி நேரம்..ஏராளமான அரிய தகவல்கள்..ராமாயணம்..மகாபாரதம்..கர்ணன் நல்லவனல்ல..வில்லன்..இப்படி நிறைய விளக்கங்கள் சரளமா வந்து விழந்தபடியே இருந்தது. அதுமட்டுமில்லாம ..இவரு சமஸ்கிருத மந்திரங்கள சொல்லும்போது..அது ஒரு தனி அழகோடயும், கம்பீரத்தோடயும் இருந்தது.)

உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடுவேன் என்பது  வார்த்தையல்ல..எனது வாக்குறுதி..

இப்படி ஒரு வாசகத்த உங்க போஸ்டர்ல..பத்திரிகையில் போட்டிருக்கிறீங்களே..எப்படி எங்க வாழ்க்கைய புரட்டிப்போடுவீங்கன்னு எல்லாரும் கேக்கறாங்க..நாளையிலிருந்து பாருங்க…

என்றபடி சொற்பொழிவை நிறைவு செய்தார்.

சென்னையில் முதல்நாள்…முதல் நிகழ்ச்சிக்கே நல்ல கூட்டம் வந்து இவரது பேச்சை மிகவும் அனுபவிச்சு கேட்டாங்க.

நிகழ்ச்சி முடிஞ்சதும்,விழா குழுவினர்..வந்திருந்த எல்லாரையும் சாப்பிட்டுட்டு போகும்படி சொல்லிட்டே இருந்தாங்க.

அப்ப  ஒரு வயதான அம்மா சொன்னதுதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு என்ட் பஞ்ச்

“..அட போங்க…இவ்வளவு நேரம் காதல கேட்டதே வயறும் மனசும் நிறைஞ்சுகிடக்கு..சாப்பாடெல்லாம் தேவையே இல்ல…”

0 comments: