Sunday, August 11

உங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது வார்த்தையல்ல..எனது வாக்குறுதி…

இப்படி ஒரு வாசகத்தோட ஒரு இளம் துறவியோட படம்..,


Sri Vijayakumara Swamigal

சமீபத்துல அடிக்கடி இந்த போஸ்டர் சென்னையில பல இடங்கள்ல கண்ல பட யாரிவர்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்தது.

அதுக்கு தகுந்த மாதிரியே..இன்னைக்கு பத்திரிகை விளம்பரமா வீட்டுக்குள்ளேயேயும் வந்துட்டாரு.

இன்னைக்கு(11ஆகஸ்ட்2013) சாயந்திரம் 5 மணிக்கு சாலிகிராமத்துல ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகளோட ஆஸ்ரமத்துல ஒரு ஆன்மீக சொற்பொழிவு.

அதோட தலைப்பு..தசாவதாரம்..,

உடனே, சாமிக்கு  போன் போட்டு பேசினேன்…சொற்பொழிவுக்கு முன்னால சாமிய சந்திக்கமுடியுமா..?

11மணிக்கு வரச்சொல்லி உத்தரவாக, சரியாக அங்கு ஆஜரானேன்.

சாலிகிராமத்துல இந்த ஆசிரமக்கிளை இன்னைக்குதான் தொடங்கப்படுகிறது.
ஆசிரமத்துல அப்பதான் புதுசா குடிவருவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகிட்டு இருந்தது.

நான் போன சமயம் சாமி இன்னும் அங்க வரல.

சற்று நேரத்தில் அங்கு ஒரு கார் வர, அதிலிருந்து சிலர் இறங்கினார்கள்.
அதிலிருந்து ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார்.

அவர்தான் விஜயகுமார சுவாமிகளின் தந்தை, “..எங்க சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் என்னோட மூத்த மகன். நான் விசிறி சாமியோட பக்தன்(யோகிராம் சுரத்குமார்).

ஆசிரியரா வேலை பாத்துட்டு இருந்தப்பதான் ஒருசமயம் பேப்பர் வேல்யேஷன்க்காக திருவண்ணாமலை போயிருந்தேன். அப்பதான் சன்னதிதெருவுல விசிறி சாமியார பார்த்தேன்.

இதுவரைக்கும் ஒரு நாலு தரம் அவரபார்த்து ஆசி வாங்கியிருக்கேன். முதல்முறை போனப்பவே என்கிட்ட நல்லா சிரிச்சு பேசினார். அப்பவே அங்க இருக்கறவங்க எல்லாம் ஆச்சரியப்பட்டாங்க. 

அடுத்தமுறை நான் போனப்ப சிங்கப்பூர்ல இருந்த என்னோட கடைசிமகனுக்கு அடிப்பட்டிருந்தது. அப்ப, என்ன பாத்த சுவாமிஜி உன்னோட கடைசிபையன் பேர் என்ன அப்படின்னு விசாரிச்சாரு. 

நான் ராம்குமார் சொல்ல அவரு குலுங்கி குலுங்க சிரிச்சாரு. ஏன்னா அவரோட பேரும் அதுதான்னு எனக்கு அப்புறமாதான் தெரிஞ்சது. அப்புறம் எனக்கு கல்கண்டு பிரசாதம் கொடுத்தாரு. அத நான் வீட்டுக்கு கொண்டுவந்து மறுநாள் காலையில என்னோட மகனுக்கு கொடுக்கலாம்னு எடுத்தப்போ கல்கண்டு துண்டு கற்பூரம் மாதிரி மாறியிருந்தது. எனக்கு ஆச்சரியமாயிட்டது. 

அத கொடுத்தபிறகு என்னோட மகனுக்கு குணமாயிடுச்சு. ..” 

அவரு சொல்லிகிட்டு இருக்கும்போதே ஒரு கார் வர, அதலயிருந்து இறங்கி வந்தவரு..காவியுடையில இருந்ததால..இவர்தான் ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகளோன்னு நான் யோசிக்க…ஆமா..அவரோட அப்பாவே என்னை அவர்கிட்ட அறிமுகம் செய்துவைச்சாரு.

ஸ்வாமிகள் என்ன உள்ளே அவரோட வரச்சொல்லி அழைச்சிகிட்டு போனாரு.
ஐடியில் வேலை செய்ற இளைஞனைப்போலதான் இருக்காரு. ரொம்பவே சாதாரணமாத்தான் எல்லார்கிட்டயும் பழகுறாரு.

பரஸ்பரம் அறிமுகம் முடிந்து…அவரைப்பற்றி கேட்டபோது…

"...சொந்த ஊர் தஞ்சாவூர், பிஇ சிவில் முடிச்சிட்டு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி நடத்திட்டு இருந்தேன். 2000 வரைக்கும் எல்&டியில தான் வேலை அதனால சென்னையிலதான் தங்கி இருந்தேன்.

அதுக்கப்பிறகுதான் 2004 ல சன்யாசம். குறிப்பட்ட சிலவற்றை 
யோகிராம் சுரத்குமார் சொல்லிக்கொடுத்தார். வேறு சிலதை நான் பயிற்சி எடுத்தேன். 

கடலூர்லதான் ஒரு ஆசிரமம் வச்சு நடத்திட்டு இருக்கேன். ஆனா, சென்னையில இருக்குற பக்தர்கள்  கூப்பிட்டதால இங்க ஒரு கிளை திறந்திருக்கேன்.

இன்னைக்கு இங்க ஆசிரமம் தொடங்கினதை முன்னிட்டு ஒரு சத்சங்கம் எற்பாடு செஞ்சிருக்கோம்.

தசாவதாரம் என்பது தலைப்பு. இது என்னன்னா, ஒவ்வொரு காலகட்டத்துலயும் என்ன தேவை இருந்ததோ அதை நிறைவேத்தற மாதிரிதான் ஒவ்வொரு அவதாரத்தோட நோக்கமும் இருந்திருக்கு. அதாவது ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் இருக்கிற தொடர்புகள இந்த சத்சங்கத்துல விளக்கப்போறேன்.

அதுமட்டுமில்லாம இன்னைக்கு சத்சங்க கூட்டத்துல ஒரு அரிய, அற்புதமான பொருளை பக்தர்களோட தரிசனத்துக்கு வைக்கப்போறோம்.
அப்படின்னு சொல்லிட்டே தங்க கவசம் அணிந்த ஒரு பொருளை காட்டினார். அது பெரிய அளவிலான வலம்புரி சங்கு.



இது  புராதனமானது, பலநூறு வருஷ பாரம்பரியம் கொண்டது. 

ஒவ்வொரு மாசமும் திருமலை திருப்பதிக்கு இத எடுத்துட்டு போயி சுவாமிக்கு அபிஷேகம் செய்திட்டு இருந்தாங்க. ஒருகட்டத்துல அது தடைபட்டு போனதால, இப்போ இந்த சங்கு இங்க வந்திருக்கு.

விஷ்ணு, “..என்னை சங்காகவும், சக்கரமாகவும் காணலாம், சங்காக இவ்வுலகிலும், சக்கரமாக அவ்வுலகிலும்…” அப்படின்னு சொல்லியிருக்கார்.
அதனால பாரம்பரியமும் விசேஷ அம்சமும் கொண்ட இந்த சங்கை தரிசனம் செய்யறதே விஷ்ணு தரிசனம்தான்…


அதுமட்டுமில்லீங்க..இது ஆசிரமம் கிடையாது..பெண்களுக்கு அவங்களோட தாய்வீடு.,ஆண்களுக்கு அவர்களது மனதிற்குள் மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு ஒர்க்ஷாப். 

நம்ம ஆசிரமத்துல யோக மூலமா ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பலவிதமான ஆச்சரியமா மாற்றங்கள ஏற்படுத்தக்கூடிய சில புது டெக்னிக்ஸ் உருவாக்கியிருக்கோம்.

 அதுக்குப்பேரு ‘மோட்சக்ரியா’  இந்த மோட்சக்ரியா வகுப்புகள் வெகு சீக்கரமே  தொடங்க இருக்கோம்.

அதுமட்டுமில்லாம அதர்வண வேதத்த நான் முறைய படிச்சிருக்கேன். அத மக்களுக்கு பயன்படுத்தும் விதமா, வரவிருக்கிற அமாவசையில இருந்து இங்கு அமாவாசை அதர்வண ஹோமம் நடத்த இருக்கிறோம். 

இந்த ஹோமத்துக்கு பலவிதமான தனிச்சிறப்புகளும், நன்மைகளும் இருக்கு. இந்த ஹோமத்திற்கு வர்றவங்க கையில வரமிளகாய் எடுத்துட்டு வரனும்." என்றார் ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்.

போஸ்டர்ல இருந்த  வாசகம் ஏனோ திரும்பவும் நினைவுக்கு வந்தது...

...உங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது வார்த்தையல்ல..எனது வாக்குறுதி..

மந்தகாசமாய் புன்னகைத்தபடி விடைகொடுத்தார்  ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்.
LR EXPORTS  உரிமையாளர் L ராஜேந்திரன் என்பவர்தான் ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள் இங்க வரனும்னு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்காரு.இன்னைக்கு இந்த சத்சங்க ஏற்பாடுகளையும் கூட சுத்திசுத்தி செஞ்சிட்டு இருந்தாரு.

ஏற்கனவே, சிந்தாதிரிப்பேட்டையில ஆசிரமக்கிளை 8ம்தேதியே ஒரு சம்பிரதாயத்துக்காக திறந்தாச்சாம். ஆனா, அங்க எல்லா பக்தர்களுக்கும் போக்குவரத்துக்கு வசதியில்லாததால ஆசிரமம் முறைப்படி இன்றிலிருந்து (11 ஆகஸ்ட் 2013) இங்கு சாலிகிராமத்தில் செயல்படும்னு சொல்லியிருக்காங்க.

8ம்தேதி சிந்தாதிரிப்பேட்டையில நடந்த ஆசிரம தொடக்கவிழா பூஜை பற்றின ஒரு வீடியோவில ஸ்ரீவிஜயகுமார சுவாமிகளோட பேட்டியும் இருக்கு(வீடியோ குவாலிட்டி சுமார்தான்) அதயும் இந்த இணைப்புல பாருங்க.

VIJAYAKUMARA SWAMIGAL ASHRAMAM OPENED AT CHINTATHIRIPET

இந்த விழா பத்திரிகையில் இருந்த இன்னுமொரு வாசகமும் நம்மை வெகுவாக கவர்ந்தது.


'...யார் கடவுளை காண விரும்புகிறார்களோ..!
அவர்களை கடவுளும் காண விரும்புகிறார்..!!'-ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்

இவரு கொஞ்சம் வித்யாசமான ஆளுதாங்க..இன்னைக்கு சாயந்திரம் நடக்குற சத்சங்கத்துக்கு வந்துதான் பாருங்களேன்.

ஆசிரமத்தின் முகவரி

ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்
எண் 23, பெரியார் தெரு, காந்திநகர்
சாலிகிராமம்
வடபழனி,
சென்ன-93
(பிரசாத் லேப் (பிரசாத் ஸ்டுடியோ அல்ல)பக்கத்துல போய் இந்த விலாசத்த விசாரிங்க)

0 comments: