Monday, August 5

என்னோட வீட்டுக்கு வருவாரா நித்யாநந்தா?–ஒரு பக்தையின் ஏக்கம்- பாகம் - 03

இந்தப் பதிவோட முதல் பகுதி

இந்தப் பதிவோட இரண்டாம் பகுதி

இது மூன்றாம் பகுதி. இனி…தொடர்ந்து படியுங்கள்.

பகவான் நித்யாநந்தாவுடனான தனது அனுபவத்தை லதா கபாலீஸ்வரன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

“….ஹீலிங் பயிற்சிக்காக என்னோட குருவோட வீட்டுக்கு போயிருந்தப்பதான் முதன்முதலா நித்யாநந்தாவ(போட்டோவுல) பார்த்தேன். அவர்தான் நான் இத்தனை வருஷமா  தேடிட்டு இருந்த குருன்னு புரிஞ்சிகிட்டேன்.

அந்தப் படத்த வச்சிருந்த என்னோட ஹீலிங் மாஸ்டரோ.. பகவான் நித்யாநந்தாவோட தீவிரமான பக்தர். தான் போற இடத்துக்கெல்லாம், அந்த படத்தையும்  கையோட எடுத்துகிட்டேதான் போவாரு. அதை யாருகிட்டயும் கொடுக்கவும் மாட்டாரு.அதனால, நான் எதுவுமே பேசாம, கிளாஸ் முடிஞ்சதும் நித்யாநந்தாவை பிரிய முடியாம பிரிஞ்சு வீட்டுக்கு வந்தேன்.

அந்தநொடியிலிருந்து என்னோட பிரேயர் இது மட்டும்தான், “பாபா…பாபா..என்னோட வீட்டுக்கு வரமாட்டீங்களா பாபா..என்னோடயே இருக்கமாட்டீங்களா பாபா….”

அவரை பாத்த நொடியிலிருந்து நான் அவரை பாபா..பாபான்னுதான் கூப்பிட ஆரம்பிச்சேன்.அது ஏன் அப்படின்னு எல்லாம் எனக்கு காரணம் தெரியல.

அடுத்த சில நாட்கள்லயே, என்னோட ஹீலிங் குரு என் வீட்டுக்கு வந்தாரு..அவருதான் எங்க போனாலுமே, நித்யாநந்தாவை கையோட எடுத்துக்கிட்டுதான் போவாருன்னு சொல்லியிருந்தேனில்லையா..என்னோட வீட்டுக்கு வரும்போதும் அந்த படத்த எடுத்துட்டு வந்தாரு.
சந்தோஷத்துல திக்குமுக்காடி போயிட்டேன்.தொலைஞ்சிபோன ஏதோ ஒன்னு எனக்கு திரும்பவும் கிடைச்சிட்ட அளவுக்கு சந்தோஷம்.

ஆனா, எங்கிட்ட பேசிமுடிச்சிட்ட கொஞ்ச நேரத்துலயே,ஹீலிங்குரு புறப்படறேன்னு சொன்னாரு. 

அதுவரைக்கும் நான்  மனசுக்குள்ள பாபாகிட்ட வேண்டிகிட்டேதான் இருந்தேன்.

“..பாபா..பிளீஸ்..பாபா…இங்கயே இருந்துடுங்க..பாபா..போயிடாதீங்க..பாபா..”ன்னு அந்தபடத்த பாத்து இதையேதான் திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருந்தேன்.

ஆனா, என்னோட மாஸ்டர் புறப்பட எழுந்துட்டாரு.அந்தபடத்தையும் ஒரு பையில போட்டு கையில எடுத்துகிட்டாரு.எனக்கு உடம்பெல்லாம் பதற ஆரம்பிச்சிடுச்சு.

"பாபா..நான் இவ்ளோ சொல்லியும் நீங்க கிளம்பிட்டீங்க இல்ல..பாபா..பிளீஸ் பாபா.."ன்னு அப்பவும் அவர்கிட்ட மனசுகுள்ளயே கெஞ்சிகிட்டுதான் இருந்தேன்.

புறப்பட்டவரு வாசல்லயே கொஞ்ச நேரம் நின்னு என்னோட  பேசிட்டே இருந்துட்டு அதுக்கப்புறமாதான் கிளம்பினாரு.

வீட்டுக்கு வெளியே போய் அவரு கார்ல ஏறும்வரைக்கும் கூட இருந்து அவர வழி அனுப்பிட்டு, வீட்டுக்குள்ள வந்தேன்.

அப்பவும் மனசுக்குள்ள..”நான் அவ்ளோ கேட்டுகிட்டும் நீ பாட்டுக்கு புறப்பட்டு அவரோட போயிட்ட இல்ல..ஏன் பாபா..?”

அழுகை முட்டிகிட்டு வந்தது.

கண்ண தொடச்சிகிட்டே வீட்டுக்குள்ளே நுழைய, அப்போதான் என்னோட பார்வையில பட்டது சேர்ல இருந்த மாஸ்டரோட பை.

ஆஹா..இதலதான பாபாவோட படம் இருந்தது. இத எப்போ இங்க வச்சிட்டு போயிட்டாரு..ன்னு , யோசிச்சபடியே பைய திறந்து பாக்கறேன்..

உள்ளே பாபா..! என்னபாத்து சிரிச்சுகிட்டிருக்காரு...,

முதன்முதலா என்ன ஆகர்ஷித்த என் குரு பகவான் நித்யாநந்தாவோட அந்த படம் இதுதான்..!”

‘..மகாலட்சுமியோட அம்சங்க இவரு.."

முதமுதலா இவரை லதா நமக்கு அப்படித்தான் சொல்லி அறிமுகப்படுத்தினாங்க.அதை கொஞ்சம் ரீகால்( நினைவு ) செஞ்சுகிட்டே, திரும்பவும் இந்தபடத்தைப் பாருங்கள்…

நிச்சயம் உங்களுக்குள் சில மாற்றங்கள் நிகழும்..

உங்க வாழ்க்கையிலயும் மகாலட்சுமிய வரவேற்க தயாராகுங்கள்…’

அற்புதங்கள் தொடரும்…காத்திருங்கள்..!

0 comments: